முதல் பிரிவு

முதல் பிரிவு

என் அன்னையை,
பிரிய நேர்ந்த முதல் நாள்!
பள்ளிக்கூடத்தில்,
நான் சேர்ந்த அந்த நாள்!
*நான் அழுது புரண்டது
என் ஆசிரியர் மிரட்டியது
தோழர்-தோழியர் தேற்றியது
எதுவும் நினைவிலில்லை.
*பிரிவைத் தாளாமல் கண்களில் நீர் படர
தனித்து விட முடியாமல் மனம் பதற
எந்தன் நன்மையே கருத்தில் மேலோங்க
விலகும் என் தாயின் முகம்
இன்றும் நினைவிலிருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *